குடும்ப தகராறு கொலையில் முடிந்தது..! 28 வயதான மனைவி குத்திக் கொலை.. |

குடும்ப தகராறு காரணமாக 28 வயதான மனைவியை குத்திக் கொலை செய்த 34 வயதான கணவன் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

குறித்த சம்பவம் தம்பகல்ல – தெலிவ பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றது. படுகாயமடைந்த மனைவி மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.  உயிரிழந்தவர் ருவல்வெல பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

34 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தம்பகல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews