எரிபொருள் இல்லை..! எரிபொருள் நிரப்பு நிலையம் மீது சாணி அள்ளி வீசி தாக்குதல்.. |

எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டதால் கோபமடைந்த நுகர்வோர் மாட்டு சாணியை அள்ளி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் மீது வீசியுள்ளனர். 

குறித்த சம்பவம் கட்டுநாயக்கா 18வது மைல் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றிருக்கின்றது.

விமான நிலையத்தினால் வழங்கப்பட்ட முன்னுரிமைக் கடிதங்களைப் பெற்றவர்களுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்கப்பட்டதால் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

விமான நிலையத்தைத் தவிர, மற்ற தனியார் வாகனங்களும் அந்த இடத்தில் எரிபொருள் நிரப்பின. ஆனால் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக

அந்த வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவது நிறுத்தப்பட்டதாகத் தெரியவருகிறது.

Recommended For You

About the Author: Editor Elukainews