இன்றும் நாடு முழுவதும் 5 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்வெட்டு!

நாடு முழுவதும் இன்று 5 மணித்தியாலங்களுக்கு அதிகமான நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கூறியுள்ளது. 

இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக, அதன் தலைவர் ஜனக்க ரத்நாக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளைய தினம் A,B மற்றும் C ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு 4 மணித்தியாலங்களும் 40 நிமிடமும் மின்துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது.

ஏனைய வலயங்களுக்குள் உள்ளடங்கும் பகுதிகளுக்கு 5 மணித்தியாலங்களும் 15 நிமிடமும் மின்துண்டிப்பு அமுலாக்கப்பட உள்ளதாக

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews