ஜனாதிபதி செயலகம் முன்பாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம்..! ஜனாதிபதி வீட்டையும் முடக்குவோம் என எச்சரிக்கை.. |

ஜனாதிபதி செயலகம் முன்பாக தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இயங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழர் நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியிருக்கின்றனர். தமிழ்தேசிய கூட்டமைப்பு, தமிழ்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, மற்றும் ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசனும் இணைந்து இந்த போராட்டத்தை நடத்தியிருக்கின்றனர்.

இதன்போது தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் நான் ஊடகங்கள் ஊடாக அரசாங்கத்திற்கு ஒரு செய்தியினை சொல்லிருந்தேன். ஆதாவது தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தவறினால் ஜனாதிபதி செயலகத்தினையோ

அல்லது ஜனாதிபதியின் வீட்டினையோ முற்றுகையிடுவோம் என தெரிவித்திருந்தேன். இன்றைய தினம் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களாக நாம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கூடியுள்ளோம்.

இது ஆரம்பம் மாத்திரமே. எமது கோரிக்கையினை நிறைவேற்ற தவறினால் ஜனாதிபதியின் வீட்டினை முடக்குவோம் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றோம். அதேபோன்று இங்கு நாம் போராட்டத்தினை முன்னெடுக்கும் போது,

ஊடகவியலாளர்கள் இல்லாத சிலர் வந்து எங்களை புகைப்படம் எடுக்கின்றனர். தமிழ் மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டுள்ள எங்களுக்கே இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது என்றால்,

வடக்கு, கிழக்கில் போராட்டத்தில் ஈடுபவர்கள் எவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுப்பார்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது. எனத் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews