இம்முறை கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சவத்திற்கு இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 100 பேருக்கு மட்டுமே அனுமதி!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற புனித கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள நிலையில் தற்போது உள்ள கொரோனா இடர் நிலை காரணமாக இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 100 பக்தர்களை மட்டும் ஆலய உற்சவத்தில் பங்கேற்க அனுமதிப்பது என வெளிவிவகார அமைச்சு மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே யாழ் மாவட்ட அரச அதிபர் தலைமையில் இடம்பெற்ற கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சவ முன்னேற்பாட்டு கூட்டத்தில் 500 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் வெளிவிவகார அமைச்சினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews