வவுனியாவில் கோர விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

வவுனியா – கணேசபுரம், மரக்காரம்பளை வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியா குளுமாட்டுச்சந்தியில் இருந்து கணேசபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞர் எதிரே வந்துகொண்டிருந்த இரு மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதால் விபத்துச் சம்பவித்துள்ளது.விபத்தில் படுகாயமைடந்த இளைஞர் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட
போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற நெளுக்குளம் பொலிசார் விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விபத்துடன் தொடர்புடைய ஏனைய இரு மோட்டார் சைக்கிள் சாரதிகளான இளைஞர் ஒருவரையும், பெண் ஒருவரையும்
விசாரணைகளின் பின்னர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.விபத்தில் மரணமடைந்த இளைஞன் பண்டாரிக்குளத்தினை சேர்ந்த 32 வயதுடைய ஸ்ரீரஞ்சன் என பொலிஸார் தெரிவித்ததிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews