சற்றுமுன் வடமராட்சி கிழக்கு கடலில் காணாமல் போனவர்களது சடலம் கரை ஒதுங்கியுள்ளன.

சற்றுமுன் வடமராட்சி கிழக்கு கடலில் காணாமல் போனவர்களது சடலம் கரை ஒதுங்கியுள்ளன.

கடந்த வியாழக்கிழமை கடற்றொழிலிற்க்கு சென்று காணாமல் போயிருந்த இரண்டு மீனவர்களது சடலமும் சற்றுமுன்னர் கரை ஒதுங்கியுள்ளது.
கடந்த நான்கு நாட்களாக காணாமல் போனவர்களை தேடும் பணி இடம் பெற்ற நிலையில் சற்று முன்னர் வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்கரையில் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன.
கரை ஒதுக்கியுள்ள சடலங்களை கிளிநொச்சி நீதிபதி முன்நநிலையில் அடையாளம் காட்டப்பட்ட பின்னர் சடலங்களை கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலைக்கு பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கும் நடவடிக்கைகள் இடம் பெறுவதாக மருதங்கேணி போலீஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: Editor Elukainews