பருத்தித்துறை சக்கோட்டை முனை பகுதி போலீசாரால் சிரமதானம்….!

பருத்தித்துறை போலீசாரால் பேதுறு முனை பிரதேசம் நேற்று சிரமதானம் மூலம் துப்பரவு செய்யும் பணிகள் இடம் பெற்றன.

காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஒழுங்கு படுத்தலில்  பருத்தித்துறை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான போலீஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க
தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் உதவி போலீஸ் அத்தியட்சகர் சுஜீவ இத்தமால் கொட பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் பருத்தித்துறை போலீஸ் நிலைய போலீசார் அனைவரும் கலந்து  கொண்டனர்
இதேவேளை குறித்த பகுதியில் மரங்களும் நாட்டி வைக்கப்பட்டன.
இம் மரக்கன்றுகளை பருத்தித்துறை போலீஸ் நிலைய பிரதான போலீஸ் பரிசோதகர்,பிரியந்த அமரசிங்க, உதவி போலீஸ் அத்தியட்சகர் சுஜீவ இத்மால் கொட உட்பட பலரும் நாட்டி வைத்தனர்.
(பருத்தித்துறை நிருபர்)

Recommended For You

About the Author: Editor Elukainews