சுருக்கு வலை பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஓன்பது பேருக்கும் பிணை, வழக்கு  18/03/2022 க்கு தவணை……!

தடை செய்யப்பட்ட சுருக்கு வலையை பயன்படுத்தி மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கடற்படையால் கைது செய்யப்பட்ட  உள்ளூர் மற்றும் வெளி மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்களுக்கும் எதிர்வரும் 18/03/2022 வரை வழக்கு பிற்போடப்பட்டுள்ளதுடன் தலா ஒரு இலட்சம் சரீர பிணையிலும்,  ரூபா 5000 காசுப் பிணையிலும் செல்ல  பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் கட்டளையிட்டடுள்ளது.  அவர்களது படகுகள் மற்றும் தொழில் உபகரணங்கள் விடுவிக்கப்படவில்லை என்பதுடன்  கடந்த வருடம் சட்டவிரோதமான கடற்றொழிலில் ஈடுபட்ட 13 பேருக்கும் இன்றைய தினம் தலா 25000/- வீதம் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. இவ்வழக்குகளை கடற்றொழில் பிரதான பரிசோதகர் திரு ராஜேந்தர் நெறிப்படுத்தியிருந்தார்.

Recommended For You

About the Author: admin