![](https://www.elukainews.com/wp-content/uploads/2022/01/susi-696x464-1.jpg)
எனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து என்னை நீக்குவதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நடவடிக்கை எடுத்தால் அதனை எதிர்கொள்வதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன் என்று, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஒழுக்காற்று விசாரணை என்று கூறி நீதிமன்றத்துக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை நாம் பார்ப்போம்.
நான் இன்று நேற்று அரசியலுக்கு வரவில்லை. நான் மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலேயே பேசினேன். வேறு எதனையும் நான் பேசவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.