ஆரியகுளத்தில் மத சின்னங்களை திணித்தால் இறந்தவர்களின் அஸ்த்தி கரைக்கும் இடமாக ஆரியகுளத்தை மாற்றுவோம்! ஆளுநருக்கு சிவாஜி எச்சரிக்கை.. |

வடமாகாண ஆளுநர் மக்கள் வரிப்பணத்தில் பெருமளவு நிதியை செலவிடுகின்றார் என்பதை தகவலறியும் உரிமைச்சட்டம் ஊடாக நிரூபிக்க முடியும் எனவும் கூறியுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  எம் கே சிவாஜிலிங்கம் முடிந்தால் தன்னுடன் விவாதத்திற்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ். ஊடக மையத்தில் நேற்று முன்தினம்  இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கு 14 மெய்ப்பாதுகாவலர்களும், 6 சாரதிகளும் காணப்படுகின்றனர்.

இவர்களுக்காக பல இலட்சம் ரூபாய்கள் செலவிடப்படுகிறது. அத்துடன் ஆளுநர் தனது எரிபொருள் மற்றும் டீசேர்ட் கொள்வனவிற்காக பல இலட்சம் ருபாவை மக்களின் வரிப்பணத்தில் செலவிடுகின்றார்.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் இதனை வெளிப்படுத்துவோம். அல்லது பகிரங்க விவாதத்திற்கு ஆளுநர் தயாரா? என கேள்வியெழுப்பியுள்ளார்.

ஆளுநர் நிகழ்ச்சிகளுக்கு வருவதற்கு பெருமளவு பாதுகாப்பு கெடுபிடிகள் இடம்பெறுகின்றன.

ஆளுநரின் உயிருக்கு ஆபத்து உள்ளதா என்றும் கேள்வியெழுப்பினார். மேலும் ஆரிய குளத்தில் மத சின்னங்களை புகுத்த ஆளுநர் முயற்சிப்பாராக இருந்தால் இறந்தவர்களின் அஸ்த்தி கரைக்கும் இடமாக ஆரிய குளத்தை மாற்றுவோம் எனவும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews