யாழ்.தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் மதுபோதையில் கடமையில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகஸ்த்தர் பணி நீக்கம்!

மதுபோதையில் கடமையில் இருந்த தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் நேற்றைய தினம் மதுபோதையில் கடமையில் இருந்துள்ளார்.

இது தொடர்பாக காங்கேசன்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது. வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்

குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை பணியிடை நீக்கம் செய்தார்

Recommended For You

About the Author: Editor Elukainews