யாழ் மாநகரசபை முன்றலில் தர்சானந்த் மற்றும் மூன்று காங்கிரஸ் உறுப்பினர்கள் போராட்டம்….!

யாழ்.மாநகர சபையின் முதல்வர் வி.மணிவண்ணனுக்கு எதிராக யாழ் மாநகர சபை முன்றலில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அகிலநிலங்கை தமிழ் காங்கிரஸ் மாநகர சபை உறுப்பினர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அமர்வு இடம்பெற்ற போது முதல்வரின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள்  வெளிநடப்பு செய்து மாநகர முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது முதல்வரின் அராஜகம் ஒழிக, சபையின் மாண்பை காப்பாற்று, வர்த்தகர்களின் வயிற்றில் அடிக்காதே போன்ற கோஷங்கள் மாநகர சபை உறுப்பினர்களால் எழுப்பபட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews