வடக்கில் 144 பேருக்கு தொற்று…!

யாழ்.மாவட்டத்தில் ஒரு வயதுக்குட்பட்ட இரு குழந்தைகள் உட்பட 105 பேருக்கும் வடக்கில் சுமார் 144 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

யாழ்.மாவட்டத்தில் 105 பேருக்கு தொற்று.

யாழ்.போதனா வைத்தியசாலையில் 46 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 27 பேர், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேர்,

யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 09 பேர், சங்கானை பிரதேச வைத்தியசாலையில் 04 பேர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 03 பேர்,

புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையில் ஒருவர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒருவர், பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,

வவுனியா மாவட்டத்தில் 09 பேருக்கு தொற்று. 

வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 பேர், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,

வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்,

கிளிநொச்சி மாவட்டத்தில் 15 பேருக்கு தொற்று.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 04 பேர், அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலையில் 11 பேர்,

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 08 பேர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர், புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,

மாந்தை கிழக்கில் ஒருவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேவேளையில்,மன்னார் கடற்படை முகாமில் 02 பேர்,

காங்கேசன்துறை கடற்படை முகாமில் ஒருவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews