இலங்கையில் வீழ்ச்சியடைந்த அந்நியச் செலாவணி கையிருப்பு!

இலங்கையின் உத்தியோகப்பூர்வ அந்நியச் செலாவணி கையிருப்பானது வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தியோகப்பூர்வ அந்நிய செலாவணி கையிருப்பு 1817 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.

இந்த அந்நிய செலாவணி கையிருப்பானது 2022 ஒகஸ்ட் மாதத்தில் 1716 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சர்வதேச நாணயநிதியமானது 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை நிதிஉதவியாக வழங்க இணக்கம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin