
நடந்து முடிந்த பிரித்தானிய பொதுத்தேர்தலில் எதிா்க்கட்சித் தலைவா் கியொ் ஸ்டாா்மா் தலைமையிலான தொழிற் கட்சி மகத்தான வெற்றியை பதிவு செய்துள்ளது. அந்தவகையில், பிரித்தானியாவில் புதிய அரசை தோ்வு செய்யும் இத்தோ்தலில், உள்ளூா் நேரப்படி நேற்று காலை 7 மணி முதல் இரவு 10 மணி... Read more »

பல்கலைக்கழக அனுமதிக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்று (05) நள்ளிரவுடன் முடிவடைகிறது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) துணைத் தலைவர் பேராசிரியர் சந்தன பி. உடவத்த கூறுகையில், இதுவரை 85,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான காலக்கெடு நீடிக்கப்படாது எனவும்... Read more »

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கடந்த வாரத்தில் 846 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு மாவட்டத்திலிருந்து 269 டெங்கு நோயார்களும், கம்பஹா மாவட்டத்திலிருந்து 146 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.... Read more »

பெண் பொலிஸார் தங்குமிட விடுதி குளியறையில் குளித்து கொண்டிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை மறைந்திருந்து படம் பிடித்த ஆண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை நுவரெலியா மாவட்ட நீதவான் பிரபுதிகா நாணயக்கார... Read more »

மறைந்த இலங்கை தமிழ் அரசு கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடல் யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு இன்று காலை விமானம் மூலமாக கொண்டுவரப்பட்டது. தமிழ் அரசு கட்சியின் திருக்கோணமலை மாவட்ட கிளைத் தலைவர், கதிரவேலு சண்முகம் குகதாசன், இரா.சம்பந்தனின் மகன் சஞ்சீவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள்... Read more »

பதுளை – சொரணதொட்ட பகுதியில் இன்று ஏற்பட்ட பாரவூர்தி விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பாரவூர்தி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியின் நடுவே, கவிழ்ந்ததில் விபத்து நேர்ந்துள்ளது. அத்துடன், இந்த விபத்தில் காயமடைந்த மூவர் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை... Read more »

பிரித்தானியா தேர்தலில் லேபர் கட்சி சார்பாக போட்டியிட்ட உமா குமாரன் அவர்கள், 19,145 வாக்குகளை பெற்று பெரும் வெற்றியடைந்துள்ளார். இவர் ஈழத் தமிழ் பெண் என்பது உலகத் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விடையம். பிரித்தானிய வரலாற்றில் முதல் தமிழ் MP உமா குமரன் ஆவார்.அதுவும்... Read more »

பெருந்தலைவர் சம்பந்தனின் இறுதிக் கிரியைகள் ஜூலை 7 திருகோணமலையில் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் அதில் கலந்து கொள்ளவுள்ளார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழ் நாட்டுத் தலைவர் அண்ணாமலை இறுதி நிகழ்வுகளில் கலந்துகொள்வார் என்று உறுதிப்படுத்தப்பட்டதாக... Read more »

பொலன்னறுவை – ஹபரணை பிரதேசத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் தகாத தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட விடுதிகள் முற்றுகையிடப்பட்டன. இதன்போது நான்கு முகாமையாளர்கள் மற்றும் சேவை வழங்கிய 11 பெண்களும் கைது செய்யப்பட்டதாக பொலன்னறுவை பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர். ஹிங்குரகொட நீதிமன்றில்... Read more »

கண்டி – மாத்தளை பிரதான வீதி (A9) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அக்குரணை நகரில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாத்தளை – கண்டி பிரதான வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தீயை கட்டுப்படுத்தும் பணி ... Read more »