பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினம் கேகாலையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், சர்வமதத் தலைவர்கள்... Read more »
மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தினால், மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் காலை தொழிற் சந்தை நடாத்தப்பட்டது. குறித்த தொழில் சந்தையானது நேற்று காலை 10 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் ஆரம்பமானது. இதன் போது பல தொழில் வழங்கும் நிறுவனங்களும் கலந்து கொண்டிருந்தனர்.... Read more »
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பெற்றீசியா ஸ்கொட்லண்டிற்கும் இடையில் நேற்று முன்தினம் (20.09.2022) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பொதுநலவாய செயலகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பில் இங்கு... Read more »
கோனேஸ்வரத்தின் புனிதத்தன்மையை இல்லாமல் செய்வதற்கான முழுமையான முயற்சி எடுக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். நேற்று 21/09/2022 பாராளுமன்றத்தில் 21.09 உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஒரு நியாயமான தீர்வை தமிழ் மக்களுடைய பிரச்சிகைகளுக்கு முன்வைக்காவிட்டால் இந்த பொருளாரதார வளர்ச்சி என்பது ஒரு... Read more »
வருட இறுதியில், டிசெம்பர் 31ஆம் திகதியாகும்போது வைத்திய நிபுணர்கள் 300 பேர் ஓய்வுபெற்று செல்லவுள்ளனர் என்றும் இது வைத்தியத்துறையில் வீழ்ச்சிக்கு காரணமாக அமையக்கூடிய விடயமென்றும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நேற்று 21/09/2022 பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை... Read more »
பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்று வந்த நிலையில், கடந்த 16 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த மாணவனின் சடலம் கெட்டம்பே பிரதேசத்தில் உள்ள மகாவலி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேராதனை பல்கலைக்கழக... Read more »
தாயாரினால் போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட பதின்ம வயது சிறுமி சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் மீட்கப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமியே நேற்று இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். சிறுமி 4 மாதங்களுக்கு மேலாக பாடசாலைக்கு... Read more »
குருந்தூர் மலையை அண்டிய தமிழர் நிலங்கள் தொல்லியல் திணைக்கத்தால் அபகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டமையை கண்டித்து நேற்றைய தினம் (21) முல்லைத்தீவு குருந்தூர் மலை பகுதியில் போராட்டம் மேற்கொண்ட முன்னாள் மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் குமுளமுனை கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவரும், காணி... Read more »
தனக்கு அநீதி இழைக்கப்படுவதாக தெரிவித்து பருத்தித்துறையை வீ எம் வீதியை சேர்ந்த ஒருவர் இன்று பருத்தித்துறை நகரசபை முன்றலில் காலை 9:00 மணிமுதல் பிற்பகல்வரை அவரது குடும்ப சகிதம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது. தமக்கு பாதிப்பான முறையில் அயல் வீட்டுக்காரர்... Read more »
(வடமராட்சி கிழக்கு சிந்தனை செல்வன்) வடமராட்சி கிழக்கையே பெரும் சோகத்தில் ஆழ்த்திய நாளும், வடமராட்சி கிழக்கிலே நாகர்கோவில் மண்ணில் இடம்பெற்ற இரண்டாவது இனப்படுகொலையை விமானப்படையின் புக்காரா விமானங்கள் நடாத்தியதன் 27 வது நினைவு நாள் இன்றாகும். அன்றைய நாட்களில் வடமராட்சி கிழக்கில் இடம் பெயர்ந்த ... Read more »