எம்மை விமர்சிக்கும் எந்த அருகதையும் சாணக்கியனுக்கு கிடையாது: நாமல் சீற்றம்

எமது தவறுகளை தட்டிக் கேட்கும் உரிமை எமக்கு வாக்களித்த மக்களுக்கு மாத்திரம் உள்ளதே தவிர, சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் சாணக்கியன் போன்றவர்களுக்கு எந்தவோர் அருகதையும் கிடையாதென முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்‌ச தெரிவித்துள்ளார். தான் சபையில் இல்லாத நேரத்தில் தன்னை பற்றி அவதூறாக பேசிய... Read more »

அரசாங்க அச்சகத்தால் அச்சிடப்பட்டுள்ள பொதுப் படிவங்களை மீளாய்வு செய்வதற்கு குழு நியமனம்

அரசாங்க அச்சகத்தால் அச்சிடப்பட்டுள்ள பொதுப் படிவங்களை மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க குழுவொன்றை நியமித்துள்ளார். ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, அரச சேவைகளை இலகுபடுத்துவதற்காக பல்வேறு அரச நிறுவனங்களால் தற்போது 98 பொதுப் படிவங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.... Read more »

நாட்டில் தினசரி 8 மணித்தியால மின்தடை ஏற்படும் அபாயம்

இலங்கையில் எட்டு மணித்தியால மின்விநியோக தடையை அமுல்படுத்த  வேண்டிய நிலை ஏற்படலாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர எச்சரித்துள்ளார். நாட்டில் தற்போது கையிருப்பில் உள்ள நிலக்கரி, ஒக்டோபர் 15ஆம் திகதி வரை மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு மட்டுமே போதுமானது.  உரிய காலத்திற்கு ... Read more »

சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் மட்ட உடன்படிக்கை தொடர்பில் எதிர்கட்சியினரின் கோரிக்கை

சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட பணியாளர் மட்ட உடன்படிக்கை தொடர்பாக நாடாளுமன்ற விவாதம் ஒன்றை எதிர்பார்ப்பதாக எதிர்கட்சி இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளது. எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர், லச்மன் கிரியெல்ல இதனை இன்று குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கை, நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்... Read more »

40,000 மெட்ரிக் தொன் பெட்ரோலுடன் நாட்டை வந்தடையவுள்ள பெட்ரோல் கப்பல்

பெட்ரோலை ஏற்றிய கப்பலொன்று இந்த வாரத்திற்குள் நாட்டை வந்தடையவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த கப்பலுக்கான ஆரம்பக் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். கப்பல் நாட்டை வந்தடைந்தவுடன் மிகுதி கட்டணம் செலுத்தப்படவுள்ளது. மேலும், 35,000 முதல் 40,000 மெட்ரிக் தொன் பெட்ரோலை... Read more »

இலங்கையில் வீழ்ச்சியடைந்த அந்நியச் செலாவணி கையிருப்பு!

இலங்கையின் உத்தியோகப்பூர்வ அந்நியச் செலாவணி கையிருப்பானது வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தியோகப்பூர்வ அந்நிய செலாவணி கையிருப்பு 1817 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது. இந்த அந்நிய செலாவணி கையிருப்பானது 2022 ஒகஸ்ட் மாதத்தில் 1716 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

ரணில் கொடுத்த அமைச்சு பதவிகள் – அதிரடி காட்டிய மைத்திரி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதிய ராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவியேற்றுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற பதவியேற்பு நிகழ்வில் பல கட்சிகளை சேர்ந்த 38 பேர் ராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். இந்நிலையில் கட்சியின் தீர்மானத்திற்கு மதிபளிக்காமல் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெற்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா... Read more »

வியாழேந்திரன், சந்திரகாந்தன் உள்ளிட்ட 37 பேர் இராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்பு.

இராஜாங்க அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகிறது. குறித்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் புஸ்பகுமார முதலாவதாக... Read more »

தேசிய பட்டியல் பதவியை தம்மிக்க பெரேராவுக்கு பில்லியனுக்கு விற்ற பசில் -மேர்வின் சில்வா பரபரப்பு தகவல்

பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தம்மிக்க பெரேராவுக்கு வழங்குவதற்காக பசில் ராஜபக்ஷ ஒரு பில்லியன் ரூபாவை வாங்கியதாக மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பணத்திற்கு விற்றதாக கூறும் மேர்வின் சில்வா, இது தொடர்பான ஒப்பந்தத்தை தொடர்பு கொண்டவர் பசில்... Read more »

சவூதி அரேபியாவிடம் இருந்து 6 பில்லியன் டொலர் எரிபொருள் கடன்..!

சவூதி அரேபியாவில் இருந்து எரிபொருளை பெறுவதற்காக 5 வருட கடனாக 6 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குமாறு கோரி சுற்றுச்சூழல் அமைச்சர் நசீர் அஹமட் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளார். சிறிலங்கா அதிபரின் சவூதி அரேபியாவிற்கான தூதுவர் என்ற வகையில் நசீர் அஹமட் குறித்த பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகத்... Read more »